Published On: Tuesday, January 17, 2012
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி - கிருஷ்ணா பேச்சு

தமிழர் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டியதே இந்தியாவின் நிலைப் பாடு என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். 4 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து உரையாடினார்.
இன்று காலை உணவு வேளையில் சுமார் 90 நிமிடங்கள் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கும் இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இரு நாட்டு உறவுகள் மற்றும் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு என்பன பற்றி விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.