Published On: Sunday, January 22, 2012
கோபத்தில் துப்பாக்கி பட ஷூட்டிங்லிருந்து வெளியேறிய விஜய்

சூர்யாவை பெருமையாக ஏ.ஆர்.முருகதாஸ், பேசிய தால் துப்பாக்கி பட ஷூட்டிங்லிருந்து கோபித்துக் கொண்டு பாதியில் வெளியேறி சென்று விட்டார் நடிகர் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் ‘துப்பாக்கி’. படத்தின் ஷூட்டிங் படுவேகமாக மும்பையில் நடந்து வருகிறது. இதில் இளைய தளபதி விஜய்க்கும் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாசுக்கும் மீண்டும் சண்டை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மோதலுக்கு காரணம், "இந்த காட்சியிலே சூர்யா நடிகர் நடித்திருந்தால் அப்படி நடிச்சிருப்பார்" என்று முருகதாஸ் சொல்ல ஷூட்டிங்லிருந்து பாதியில் விஜய் கோபித்துக் கொண்டு ஓட்டலுக்கு சென்றுவிட்டதாக கிசு.. கிசுக்கள் வெளியாகியுள்ளன.
மேலும் ஒரு நாள் முழுக்க ஓட்டல் ரூமை விட்டு வெளியே வரவே இல்லையாம் விஜய். ஏற்கனவே விஜய்க்கும், முருகதாசுக்கும் சம்பள பிரச்சனையில் சண்டை வந்ததாகவும் கூறப்பட்டது.