எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, June 06, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, February 26, 2012

நாளை வடக்கில் மாபெரும் மக்கள் பேரணி

Print Friendly and PDF

ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நாவின் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறை வேற்றப்படுவதைக் கண்டித்து யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவுப் பகுதி மக்கள் மாபெரும் கண்டனப் பேரணி ஒன்றினை நடத்தவுள்ளன.

நாளை (திங்கட்கிழமை) 10 மணிக்கு இந்த மாபெரும் கண்டனப் பேரணி நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் மற்றும் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதற்கமைய இந்த ஆர்ப்பாட்டப் பேரணிக்கான ஒழுங்குகளை அந்தந்தப் பிரதேச மக்கள் ஏற்பாடு செய்து வருகின் றனர். ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் ஒரு இறைமையுள்ள நாட்டுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரும் அதிகாரம் எந்த ஒரு ஐ.நாவின் அமைப்புக்கும் கிடையாது என்பதை வலியுறுத்தியும், இலங்கையில் தற்பொழுது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தாம் முன்பு பட்ட கஸ்ட துன்பங்களை மறந்து சந்தோஷமாக வாழ்வதையும் சுட்டிக்காட்டியே தாம் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வுள்ளதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலி கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த கால போரினால் முழுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட கிளிநொச்சிப் பகுதி மக்கள் தற்பொழுது பல்வேறு அரச அபிவிருத்திகளைப் பெற்று மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகச் செயற்படுவோரைக் கண்டித்து இப்பிரதேச மக்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியினை ஒழுங்கு செய்து நடத்தத் திட்டமிட்டுள்ளனர் என்றார்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452