Published On: Wednesday, March 07, 2012
அடுத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தம்புள்ள மைதானத்தில்

அடுத்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் தம்புள்ள விளையாட்டரங்கில் நடாத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே பாராளுன்றத்தில் தெரிவித்தார். ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வாய்மூல பதிலுக்காக கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலாகவே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
ரங்கிரி தம்புளு விளையாட்டரங்கில் நீண்ட நாட்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. அந்த விளையாட்டரங்கில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா என அவர் கேள்வி எழுப்பினார். 2010இல் ஆசிய கிண்ண போட்டிகள் நடத்தப்பட்டதை சுட்டிக்காட்டிய அமைச்சர் இனிவரும் காலங்களில் பல போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

