எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Wednesday, June 18, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 09, 2012

பஷில் ராஜபக்ஷவின் உதவியுடன் நீர்கொழும்பு அபிவிருத்தி செய்யப்படும்

Print Friendly and PDF


(கலாநெஞ்சன்) 
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் உதவியுடன் நீர்கொழும்பு நகரம் மேலும் அபிவிருத்தி செய்யப்படும். மாநகர சபையின் கீழ் செயற்படும் முன்பள்ளி பாடசாலைகள், தாய்-சேய் நலன் பிரிவு, கழிவகற்றல், மைதானங்கள், சந்தைகள் இவை யாவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நீர்கொழும்பு மாநகர சபையின் புனரமைப்பு செய்யப்பட்ட நிதிப்பிரிவு அலுவலகத்தை நேற்று வியாழக்கிழமை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே, மேல்மாகாண சபை வீதி அபிவிருத்தி, வீடமைப்பு, நிர்மாணம், மீன்பிடித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் நிமல்லான்ஸா குறிப்பிட்டார். இந்நிகழ்வில் மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா தொடர்ந்து உரையாற்றுகையில், காமச்சோடை வாராந்த சந்தை 130 மில்லியன் ரூபா செலவிலும் நீர்கொழும்பு இரவுச்சந்தை 160 மில்லியன் ரூபா செலவிலும் புனரமைப்பு செய்யப்படும். அத்துடன் 800 மல்லியன் ரூபா செலவிடப்பட்டு மைதானங்கள் புனரமைப்பு செய்யப்படும். நீர்கொழும்பு ராஜபக்ஷ பூங்கா 1940 மில்லியன் ரூபா செலவில் நவீன மயப்படுத்தப்படவுள்ளது என்றார்.




Related News
பிரதான செய்திகள்
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
இந்தியச் செய்திகள்
சர்வதேச செய்திகள்
நிகழ்வுகள்
விளையாட்டுச் செய்திகள்
சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்
மேலும் »
வர்த்தக செய்திகள்
மண்டு வாத்தியார்

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452