Published On: Thursday, March 08, 2012
நூறுல் ஹுதா அஹதிய்யா பாடசாலையின் வருடாந்த மீலாத் நபிவிழா எதிர்வரும் 11ஆம் ததிகதி காலை 9 மணிக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர். றாசிக் பரீட் மண்டபத்திலே இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. நூறுல் ஹுதா அஹதிய்யா பாடசாலை அமைப்பின் தலைவர் எம்.எம்.எம்.முபாறக் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக கல்முனை மாநகர சபை முதல்வர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப், கௌரவ அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம் சலீம், விசேட அதிதியாக நூறுல்ஹக், தேசமானிய சாமஸ்ரீ அல்ஹாஜ் ஏ.எல்.ஹபுல் (ஆசாத்) ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.