Published On: Saturday, March 03, 2012
நாட்களை எண்ணுகிறார் சிரியா அதிபர் - ஒபாமா

சிரியா அதிபரின் நாட்கள் எண்ணப் படுவதாக அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஒபாமா அளித்த பேட்டியில் கூறுகையில், சிரியாவில் கடந்த சில மாதங்களாக அதிபர் பஷார் அல்,ஆசாத்துக்கு எதிராக போராட்டம் நீடிக்கிறது. அவர் பதவி விலக மறுத்து வருகிறார். அவரை பதவியிலிருந்து அகற்றி விட்டு அமைதியான ஜனநாயக அடிப்படையில் புதிய அரசை அமைப்பது குறித்து உலக நாடுகளுடன் பேசி வருகிறேன். லிபியாவை போல சிரியா விவகாரத்தில் செயல்பட முடியவில்லை. சிரியாவுக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை சீனாவும் ரஷ்யாவும் தோற்கடித்து விட்டதுதான் காரணம். எனினும், அதிபரின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்றார்.