எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, May 29, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 08, 2012

ஜெ. ஸ்ரீரங்கம் கோயிலில் பெருமாள் தரிசனம்

Print Friendly and PDF


(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது) 
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு வருகை தந்த முதல்வர் ஜெயலலிதா, அவர் பிறந்த மகம் நட்சத்திர நாளில் ரங்கநாதரை சேவித்தார். அ.தி.மு.க., பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் திகதி வருகிறது. மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் பிறந்த ஜெயலலிதா, தன் நட்சத்திர நாளில் பிறந்தநாளை கொண்டாடுவது வழக்கம்.


மாசி மாதம் 24ஆம் திகதியான நேற்று அவர் பிறந்த மகம் நட்சத்திர நாள். இதையடுத்து ஜெயலலிதாவின் இஷ்ட தெய்வமாக விளங்கும், ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்ய நேற்று மாலை அவர் தனிவிமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமானநிலையத்தில் இருந்து கார் மூலம் சென்னை பை-பாஸ் சாலை, திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை, மாம்பழச் சாலை, அம்மாமண்டப சாலை, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா ஆர்ச் வழியாக திருவடித்தெரு, மேல உத்திரவீதி வழியாக, "ரங்கா ரங்கா' கோபுரம் வந்தார்.

"ரங்கா ரங்கா' கோபுரம் முன், ஜெயலலிதாவுக்கு தங்கக்குடத்தில் பூரண கும்ப மரியாதையை, கோவிலின் ஆஸ்தான பட்டர்கள் சுந்தர் பட்டர், நந்து பட்டர் வழங்கினர். "ரங்கா ரங்கா' கோபுரம் வழியாக சென்ற ஜெயலலிதா, கருடாழ்வார் சன்னதியில் தரிசனம் செய்தார். ஆரியபட்டாள் வாசல் வழியாக சென்று, மூலவர் பெரிய பெருமாளை தரிசனம் செய்தார். அப்போது ஜெயலலிதா வழங்கிய பட்டு வஸ்திரம், ரங்கநாதருக்கு சார்த்தும்படி செய்யப்பட்டிருந்தது.

ஜெயலலிதா பெயரில் பெருமாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பெருமாளை சேவித்த ஜெயலலிதாவுக்கு, கோவில் சார்பில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் ஒரே ஒருநாள் மட்டும் நம்பெருமாள், தாயாருடன் சேர்ந்து சேவை சாதிக்கும், "சேத்தி ஸேவை' படம் வழங்கப்பட்டது. திருக்கொட்டாரம் வழியாக பேட்டரி காரில் சென்று தாயார் சன்னதியில் தரிசனம் செய்தபிறகு, பேட்டரி கார் மூலம், வசந்த மண்டபம், நந்தவனம் வழியாக சக்கரத்தாழ்வார் சன்னதி மற்றும் உடையவர் (ராமானுஜர்) சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார்.

கோவிலில் நாதஸ்வரம், தவில் வாசிக்கும் வித்வான்கள் மூன்று பேருக்கு பட்டு வேட்டிகள், துண்டுகளும், சுந்தர் பட்டர் உள்ளிட்ட நான்கு பேருக்கு பட்டு வேட்டிகள், சேலைகளையும் வழங்கினார். மாலை 6.40 மணிக்கு, கிழக்கு வெள்ளைக்கோபுரம் வழியாக வெளியே வந்த ஜெயலலிதா, வந்த வழியே மீண்டும் கார் மூலம் திருச்சி விமான நிலையம் திரும்பினார். அவரது தனி விமானம் இரவு 7.30 மணிக்கு, திருச்சியில் இருந்து சென்னைக்குக் கிளம்பியது.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452