எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Sunday, May 04, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 11, 2012

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

Print Friendly and PDF


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின் மிக உயர் மட்டத்துடன் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்களின் பின்னரே மிகக் கவனமான முறையில் பிரதிபலிப்புகளை வெளிப்படுத்தும் விதத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக வாஷிங்டன் கூறியுள்ளது. இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் புலம் பெயர்ந்த தமிழர்களும் வெவ்வேறு காரணங்களுக்காக கண்டித்துள்ளனர்.

இந்தத் தீர்மானமானது தலையீடு செய்யும் நடவடிக்கையெனவும் நல்லிணக்கத்துக்கு உதவப் போவதில்லையெனவும் இலங்கை அரசாங்கம் கூறியுள்ளது. அதேவேளை இந்தத் தீர்மானம் அரசாங்கத்தை பிணையெடுக்கும் நடவடிக்கை எனவும் வடகிழக்கு மாகாணங்களிலுள்ள தமிழர்களுக்கு குறிப்பிடத்தக்க எந்தவொரு அரசியல் அதிகாரங்களையும் வழங்கும் விடயத்தில் குறைவான தன்மையை பிரதிபலிப்பதாக தீர்மானம் இருப்பதாக புலம்பெயர்ந்த தமிழர்கள் சுட்டிக்  காட்டியுள்ளனர்.

இதேவேளை ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அமெரிக்காவின் தீர்மானம் தொடர்பான உத்தியோகப் பற்றற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி எய்லின் ஷேம்பர்லின் டொனாகோ, யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கழிந்த நிலையில் தேசிய நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு என்பவற்றுக்கான உறுதியான நடவடிக்கைகளை இலங்கை மேற்கொண்டிருக்க வேண்டுமென கூறியுள்ளார். இலங்கை மக்களுக்கான தருணம் கைநழுவிப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

சகல பிராந்தியங்களினதும் தூதுக் குழுக்கள் மத்தியில் விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பயன்தரும் பல சிபாரிசுகளை இத் தீர்மானம் உள்ளடக்கியிருக்கிறது. இந்த தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்துடன் பங்காளியாக செயற்படுவதற்குரிய நீண்ட கால எமது விருப்பத்தை நாங்கள் அழுத்தி உரைத்திருக்கிறோம். நல்லிணக்கம், பதிலளிக்கும் கடப்பாடு போன்ற பரந்து  பட்ட விடயங்கள் குறித்து நாங்கள் எமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறோம் என்றும் எய்லின் ஹேம்பர்லின் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை தீர்மானத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகள் மற்றும் அதற்கான காரணங்களையும் எய்லின் விபரித்திருக்கிறார். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு வழங்கிய பங்களிப்புகளை தீர்மானம் அங்கீகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இலங்கை அரசாங்கத்துக்கு ஆக்கபூர்வமான பல பரிந்துரைகளை ஆணைக்குழு வழங்கியுள்ளது. அதேவேளை இலங்கை அரசாங்கமானது இந்தப் பரிந்துரைகள் தொடர்பாக நம்பகரமான செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அறிவித்திருக்கவில்லை. அத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான மேலதிக நடவடிக்கைகளையும் அரசாங்கம் செய்திருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

அதேவேளை இலங்கை அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படும் விமர்சனத்தை எய்லின் நிராகரித்துள்ளார். நீண்ட கால மோதல் முடிவடைந்த நிலையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாக அர்த்த புஷ்டியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது. தமிழ் மக்கள் இலங்கையின் தேசிய வாழ்க்கைக்கு திரும்பிச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். 

பேரவையின் நடவடிக்கையானது சர்வதேச சமூகத்தின் பிரதிபலிப்பாக உள்ளது. எமது கரிசனைகளை சர்வதேச அமைப்புகள் பல கவனத்தில் கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கம் இப்போது சமாதானத்திற்கான விதைகளை களத்தில் விதைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452