Published On: Monday, August 29, 2011
கல்முனையில் அரசாங்கத்தை எதிர்த்து முஸ்லிம் காங்கிரஸ் போட்டி

எஸ்.எம்.எம்.றம்ஸான்
அரசாங்கத்ததோடு இணைந்திருக்கும் நாங்கள் அரசாங்கத்தை எதிர்த்தது கல்முனை மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபைத் தேர்தலுக்கு அம்பாறை கச்சேரியில் வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு ஊடகங்களுக்க கருத்துத் தெரிவிக்கும்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ரீ. ஹஸன்அலி மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்; இத்தேர்தலை நேசசக்தியோடுதான் நடாத்தவுள்ளோம் எமது பிரச்சாரங்கள் கூட எதிர்கால இனப்பிரச்சினை தொடர்பாகவே பெரும்பாலும் அமையும். நாங்கள் 7 மாநகர சபையில் தனித்தும் அரசாங்கத்துடன் சேர்ந்தும் போட்டியிடுகிறோம். ஆனால் கல்முனை மாநகரசபையில் தனித்துத்தான் போட்டியிடுகிறோம் இதனால் இத்தேர்தலில் ஆரோக்கியமான பிரச்சாரங்களை மேற்கொண்டு அமைதியான நல்லதோர் தேர்தலை நடாத்துவதற்காகவே களமிறங்கியுள்ளோம். என்றார்.
கல்முனை மாநகர சபையை மீண்டும் உங்களது கட்சி கைப்பற்றுமா? என வினவியபோது…
நிச்சயமாக வெற்றி பெறுவோம் ஏனெனில் கடந்தகாலங்களில் மக்கள் எமது கட்சிக்கு அளித்த வாக்குகள் மற்றும் ஆதரவுகளின் பிரதிபலனாக நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கைப்பற்றுவோம் என்றதுடன் நல்ல மிகவும் திறமையான வேட்பாளர்களை இம்முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தும் உள்ளோம் என்றார்.
மேயராக உங்கள் கட்சியினால் குறித்த வேட்பாளர் ஒருவரை அடையாளப் படுத்தியுள்ளீர்களா? எனக்கேட்க...
இல்லை. ஆனால் அதை கட்சி தீர்மானிக்கும் எனக் கூறினார்.