எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, August 26, 2011

ஆறடிச் சாம்பல்

Print Friendly and PDF



நாழிகை நாடகங்கள்...
அரங்கேற அனுமதிக்கப்படுகின்றன.
தூரிகையின் வரத்தினால்...
ஆறெட்டுச் சிறகுகளுடன்...
இறக்கைகளின் இடுக்கினுள்..!

ஊண் உறக்கமற்ற உயில் எழுதி...
மச்சம் கொண்ட மயிலிறகுடன்...
பஞ்சு நிரப்பிய மேகங்களாக...
கடைத்தெடுத்த எதிர்பார்புகளுடன்...
காத்திருப்பன்..!

அஞ்சி பத்து சந்திரன்கள்,
அடுக்கி வைத்த அப்பங்களாக...
சாம்பல் பிடித்த அகப்பையில்...
உப்புத் தண்ணி சம்பலுடன்...
நாறிப்போச்சு...

மனித நரம்புகளில் மின்சாரமெடுத்து
வரம்புதனில் வண்டியோட்டி...
ஊறிய முளைகளுடன் உருவில்
நானும் கூழாங்கற்களானேன்.

எட்டிப்பிடித்த ஏணிகளில்
தொட்டில் தொங்கும் தொழுவங்களாக...
சுருக்கிக் கட்டிய கொடியிலிருந்து..
தொப்பென விழும் வௌவால்களாக..
பூசித்துப் போக நியாயமில்லை...

சபித்தாலும், சாபமிட்டாலும்
ஆறடிச் சாம்பலுக்குள்...
பூத்திருப்பன்!
என்றும் காத்திருப்பன்...

- ஏ.ஜ.எம்.பிறவ்ஸ்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452