Published On: Thursday, February 09, 2012
'தாக்கத்தி' கவிதைத் தொகுதி வெளியீடும் சிறப்புக் கவியரங்கமும்
எஸ்.ஜனூஸ் எழுதிய 'தாக்கத்தி' கவிதைத்தொகுதி வெளியீட்டு விழா ஞானக்கவி எஸ்.நிஜாமுதீன் தலைமையில் இம்மாதம் 20ஆம் திகதி காலை 9 மணிக்கு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி முஹம்மது சிராஸ் மீராஸாஹிப் கலந்து கொள்வதோடு இன்னும் பல சிறப்பு அதிதிகளும் வருகை தரவிருக்கிறார்கள்.

தாக்கத்தி கவிதைத் தொகுதி வெளியீட்டு விழாவை தொடர்ந்து முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கவிஞர் அலியார் பீர்முஹம்மது தலைமையில் சிறப்புக் கவியரங்கமும் இடம்பெறவுள்ளது. இக்கவியரங்கில் ஏ.எம். தாஜ், எஸ்.ரபீக், கிண்ணியா அமீரலி, ரி.இஸ்மாயில், பொத்துவில் அஸ்மின், மருதமுனை விஜிலி, சுகைதா ஏ.கரீம் ஆகியோர் கவிதை பாடவிருக்கிறார்கள்.





