எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, December 26, 2011

மன்னாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்புகளுக்கு நடவடிக்கை எடுக்கவும்

Print Friendly and PDF


(இர்ஷாத் றஹ்மத்துல்லா) 
மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் பாதிப்புக்குள்ளான மக்களின் தேவைகள் குறித்து கண்டறிந்து அதற்கான நடவடிக்கை செய்யுமாறு வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

தற்போது நாட்டில் பல பிரதேசங்களில் வெள்ள அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும்,குறிப்பாக வடக்கில் மீள்குடியேற்ற கிராமங்களில் ஏற்படடள்ள வெள்ளத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகரசபை மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள் அமைச்சர் றிசாத் பதியுதீனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே இந்த பணிப்புரையினை வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மக்களின் அவசர தேவைகளுக்கு உதவும் பொருட்டு பாதுகாப்பு படையினரின்  அவசியத்தையும் உரிய அதிகாரிகளுக்கு அமைச்சர் றிசாத் பதியுதீன் அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சரின் மன்னார் மாவட்ட இணைப்பு செயலாளர் எம்.முனவ்வர் தெரிவித்தார்.

அதேவேளை, முசலி பிரதேசத்தில் வேப்பங்குளம் மக்களை அவதானத்துடன் இருக்குமாறும்,கடந்த வருடத்தில் இப்பிரதேசம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதால் பெரிதும் சிரமங்களை ஏதிர்கொண்டதாகவும் அமைச்சர் றிசாத் பதீயுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452