Published On: Tuesday, January 17, 2012
அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலய வித்தியாரம்ப விழா

(நிஸார் ஜமால்தீன்)
அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலயத்தின் வித்தியாரம்ப விழா இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் வளாகத்தில் கல்லூரின் அதிபர் எம்.ஏ.அன்சார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கௌரவ அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நஸீர், விஷேட அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் உட்பல பல கல்விமான்களும் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.


