Published On: Tuesday, January 17, 2012
மாடிக்கட்டடம் திறப்பு விழாவும் கௌரவிப்பு நிகழ்வும்
அட்டாளைச்சேனை இக்றஃ வித்தியாலயத்தின் தேசகீர்த்தி எம்.எஸ். உதுமாலெப்பை மண்டப புதிய மாடிக் கட்டடம் திறப்பு விழாவும் பாடசாலையில் பல துறைகளிலும் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் பாடசாலையின் அதிபர் திருமதி எம்.எம். அஸ்ஹர் தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும் கிராமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகவும் கௌரவ அதிதியாக அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம், சிறப்பு அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, அதிதிகளாக அட்டாளைச்சேனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் என்.கே.எம். இப்றாஹீம், பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். அஹமட் கியாஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம். அஸ்ஹர், அட்டாளைச்சேனை அபிவிருத்திக்குழுவின் தலைவரும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் இணைப்பாளருமான ஏ.சீ. சைபுதீன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். ஜஃபர் உட்பட பல கல்விமான்களும் பிரதேச பள்ளிவாயல் தலைவர்களும் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.
பாடசாலையில் சாதனைகள் படைத்த பல மாணவர்களும், கல்வித்துறைக்கு தம்மை அர்ப்பணித்த முக்கியஸ்தர்களும் பரிசில்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



