Published On: Tuesday, January 17, 2012
புத்தளத்தில் டெங்கு தடுப்பு வார நடவடிக்கைகள்
(புத்தளம் செய்தியாளர்)
சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட டெங்கு தடுப்பு வாரத்தை முன்னிட்டு புத்தளத்தில் பல்வேறு நடவடிக்கைகள் நேற்று முதல் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. வைத்திய சுகாதார அதிகாரி காரியாலயம், பொலிஸார், இராணுவத்தினரும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பொது சுகாதார அதிகாரி பிரிவுகள் பிரிக்கப்பட்டு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.


