எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, January 22, 2012

தாய்க்கு துணையாக வந்த சிறுவன் பாம்பு கடித்து மரணம்

Print Friendly and PDF


(கலாநெஞ்சன்) 
வேலை முடிந்து வீடு திரும்பிய தாய்க்கு துணையாக வந்த சிறுவன் பாம்பு கடித்து மரணமாகியுள்ளான். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கட்டானை, ஹல்பே, பட்டலன்தூவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையொன்றில் தரம் 6 இல் கல்வி கற்கும் தினேஷ் திமுத்து கபிலரத்ன என்ற 12 வயதுடைய சிறுவனே சம்பவத்தில் பலியானவனாவான்.


சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, சிறுவனின் தாயார் சீதுவை பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தொழில் புரிபவராவார் இவரது கணவர் 6 வருடங்களுக்கு முன்னர் மரணமாகியுள்ளார் இவருக்கு மூன்று பிள்ளைகள். சம்பவத்தில் இறந்தவர் இளைய மகனாவார்.

வேலை முடிந்து இரவு வேளையில் வீடு திரும்பும் இவருக்கு துணையாக வருவது சம்பவத்தில் இறந்த அவரது இளைய மகனாவார். இதற்காக அந்த சிறுவன் தினமும் மாலை வேளையில் மடம்பெல்லை சந்திக்கு செல்வது வழக்கமாகும். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை சிறுவன் தனது தாயாரின் துணைக்கு சென்று வீடு திரும்பும்போது வீட்டருகில் உள்ள மின்சார கம்பம் அருகில் இருந்த பாம்பு திடீரென்று சிறுவனின் வலது கால் விரலை கடித்துள்ளது.

இதனைஅடுத்து சிறுவன் அருகில் இருந்த தடியொன்றை எடுத்து அந்த பாம்பை அடித்து கொன்றுள்ளான் ஆயினும் சிறுவனின் காலிலிருந்து இரத்தம் கசிந்ததுடன் மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கொடகமுவ அக்கரகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகையில் இடையில் சிறுவன் மரணமாகியுள்ளான்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452