எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 12, 2012

ஒன்லைன் விசா மூலம் 10 நாட்களில் 7 கோடி ரூபா வருமானம்

Print Friendly and PDF


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து ஒன்லைன் விசாவுக்காக கடந்த 10 நாட்களுக்குள் மாத்திரம் 7 கோடி ரூபா பணம் வருமானமாக கிடைக்கப் பெற்றுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் பிரதம கட்டுப்பாட்டாளர் நாயகம் சூலரத்ன பெரேரா தெரிவித்தார்.

இதேவளை, நேற்று முன்தினம் 10ம் திகதி நள்ளிரவு முதல் நேற்று நண்பகல் வரையான காலப் பகுதிக்குள் மாத்திரம் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் இலங்கை வருகைத் தந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் வருபவர்களுக்கு இதுவரை காலமும் இலங்கை இலவச விசா வழங்கி வந்துள்ளது.

இந்நிலையில், இலவச விசா வழ ங்கும் நடைமுறை 2011 டிசம்பர் 31ஆம் திகதி முதல் இரத்துச் செய்து அதற்கு பணம் அறவிடுமாறு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியிருந்தார். பாதுகாப்புச் செயலாளரின் ஆலோசனை க்கமைய ஜனவரி முதலாம் திகதி முதல் வெளிநாடுகளிலிருந்து இலங்கை வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து கடந்த 10 நாட்களுக்குள் 7 கோடி ரூபா அறவிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452