இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த 22 இந்திய மீனவர்கள் கைது
இந்தியாவிலிருந்து ஐந்து படகுகளில் வந்த 22 இந்திய மீனவர்களே சனிக்கிழமை இரவு தலைமன்னாருக்கு வடக்கேயுள்ள கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது ஐந்து படகுகளும் கைப்பற்றப்பட்டிருப் பதாகவும் கொமாண்டர் மேலும் கூறினார்.
இதேவேளை இம்மாதம் ஆரம்பத்தில் ஆந்திர அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இந்தியாவில் இறுதியாக சிறை வைக்கப்பட்டிருந்த 25 இலங்கை மீனவர்களும் நேற்றுக் காலை நாடு வந்தடைந்ததாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டிருக்கும் 22 இந்திய மீனவர்களும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.