எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 28, 2012

சர்வதேசத்தில் இலங்கைக்கு சாதக நிலை - அமைச்சர் மஹிந்த சமரசிங்க

Print Friendly and PDF


ஐநா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் தான் ஆற்றிய உரையை அடுத்து இலங்கை குறித்து சாதக நிலை ஏற்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

உரையை அடுத்து பல நாடுகள் இலங்கையின் எதிர்கால திட்டங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்பட்டு வரும் நிலையில் அது குறித்து ஐநா மனித உரிமை கூட்டத்தில் பிரேரணை சமர்பிப்பது அர்த்தமற்றது என பலர் அறிந்துள்ளதாக மஹிந்த சமரசிங்க கூறினார். 

ஐநா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள பிரதிநிதிகள் மார்ச் 1ம் திகதி பகிரங்க விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் கருத்து வெளியிட நேரம் ஒதுக்கி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இலங்கை குறித்து சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தி வருவதாகவும் மேலும் சந்தேகம், வாதம் இருப்பின் நேருக்கு நேர் கேள்வி எழுப்பி நிவர்த்தி செய்து கொள்ளலாம் எனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார். 

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452