எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, February 13, 2012

நஷீரை எதிர்த்தவருக்கு பதவி; புது அதிபர் ஹசன்

Print Friendly and PDF


மாலைத்தீவு அமைச்சரவையில் 7 பேர் புதிதாக சேர்க்கப்பட்டனர். முன்னாள் அதிபர் நஷீரை எதிர்த்தவருக்கு மந்திரி பதவி கொடுத்தார் புது அதிபர் ஹசன்.  மாலைத்தீவு நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ததுடன், கைது செய்து சிறையில் அடைத்த முன்னாள் அதிபர் முகமது நஷீத்துக்கு எதிராக புரட்சி வெடித்தது. தலைநகர் மாலியில் போராட்டம் நடத்திய மக்களுடன் போலீசாரும் இணைந்து,

 அதிபருக்கு எதிராக களத்தில் இறங்கியது. ராணுவம் தலையிட்டு போராட்டத்தை ஒடுக்கியது. இதையடுத்து, ராணுவ நிர்பந்தத்தால் நஷீத் பதவி விலகினார். துணை அதிபராக இருந்த முகமது வாகீத் ஹசன் புதிய அதிபரானார். தனது அரசை ராணுவம்தான் கவிழ்த்தது என்றும், உலக நாடுகள் இதில் தலையிட வேண்டும் என்றும் நஷீத் கூறினார். இந்நிலையில், புது அதிபர் ஹசன் தனது அமைச்சரவையை நேற்று விஸ்தரித்தார். புதிதாக 7 பேருக்கு அமைச்சர் பதவி தரப்பட்டது. 

இதில் முன்னாள் சர்வாதிகாரி அப்துல் கயூமின் ஆதரவாளர்களான அசீமா சாகூரு, முகமது ஹுசைன் செரீப் முண்டு ஆகியோரும் அடங்குவர். அசீமா அட்டர்னி ஜெனரலாக இருந்தவர். மாலத்தீவின் முதல் பெண் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதே போல், நஷீரை எதிர்த்து கைதான வக்கீல் முகமது ஜமீத் அகமதுவுக்கு உள்துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. அரசியல் குழப்பங்களுக்கு விடை கொடுக்கும் வகையில், பல்வேறு கட்சியினருக்கும் பதவி கொடுத்து, தேசிய அரசு போல் தனது அரசை மாற்றியுள்ளார் புது அதிபர் ஹசன்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452