எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, June 09, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 14, 2012

அன்புடீனின் 'நெருப்பு வாசல்' சிறுகதைத் தொகுதி அறிமுகம்

Print Friendly and PDF


(எஸ்.எல்.மன்சூர்) 
“ஒரு எழுத்தாளன் தலைசிறந்த ஆக்கப்படைப்பாளனாக விளங்க வேண்டுமானால் தன்னிலிருந்தே தன்னை விடுவிக்க வேண்டும்” என்று ஒரு அறிஞன் கூறியதற்கொப்ப ஆசுகவி அன்புடீன் நாடறிந்த எழுத்தாளர் இலக்கிய உலகிற்கிற்குள் தன்னை விடுவித்து மீண்டும் ஒரு நூலை “நெருப்பு வாசல்” எனும் தலைப்பில் சிறுகதைத் தொகுப்பாக (20.02.2012) வெளியிடுகின்றார். உண்மையில் ஆசுகவி தென்கிழக்கின் தலைசிறந்த கவிதை பொழிப்பாளர்களுள் மூத்தவராகவே மிளிர்கின்றார். கதை, கவிதை, கட்டுரை, ஆக்கப்படைப்புக்கள், மேடைப்பேச்சு, மேடைநடிகன் என்று பல்வேறு தோற்றப்பொழிவுகளுக்கும், பாத்திரங்களுக்கும் சொந்தக்காரர் இந்த ஆசுகவி. நீண்டகாலம் இலக்கிய உலகிற்குள் நன்கு அறியப்பட்டவர். இவரது சொல்லில் இளையோடும் நளினம், நடை, பேச்சுத்திறன், சொற்புணர்ச்சி, அடுக்கிடுக்கு மொழி போன்றவைகள் கேட்போரையே ஆசுபடவைக்கும் என்பதனால்தான் என்னவோ ஆசுகவியாக என்றும் பதினாறுபோல், புன்னகை பூத்த நந்தவனத்தினுள் சாந்தம் நிறைந்த இளவலாக வருகின்றார்.

“முகங்கள், ஐந்து தூண்கள், சாமரையில் மொழிகலந்து, மரணமல்ல ஜனனம்” இவரது கவிதை நூல்கள். தற்போது “நெருப்பு வாசல்” எனும் சிறுகதை தொகுப்பு மூலமாக தன்னை புடம்போட்டுள்ளார் அன்புடீன். இவரது நெருப்பு வாசல் வழியாக உள்ளே நுழைந்தால் “பொக்கிஷங்களுக்குரிய முத்தாப்பு”  என்று பெருவெளி பதிப்பகம் சார்பாக எம். அப்துல் றஸாக் முத்தாப்பாய் ஆசுகவி பற்றி பல விளங்கங்களை தொட்டு, தெளித்து நம்முன்னே கொண்டுவருகின்றார். அப்பப்பா எத்தனையோ! எத்தனையோ!! ஒருகட்டத்தில் “ஒரு புள்ளியிலிருந்து விலகி விவாதிக்க அன்புடீனின் கதைக்குள் நிறைய நேரமும் அவகாசமுமிருக்கிறது இவ்வெளியீட்டுரை போதுமானதல்ல” என கதைகளின் கனத்தை விலாவாரியாக விபரிக்கும் அளவுக்கு கதைகளின் கனம் தெரிகிறது. நூலுக்கான முன்னுரையில் சண்முகம் சிவலிங்கம் ஆசுகவியின் கதைக்கான பிரக்ஞைகளை தத்ரூபமாக எடுத்தாண்டு இறுதியில் “அன்புடீன் மாமூலான கதைகளிலிருந்து சற்று வித்தியாசமான முறையில் சிறுகதைகளை சுதந்திரமாக எழுதவேண்டும் என்ற தேவையை உணர்ந்திருக்கிறார்” என்று கூறும் அளவுக்கு இன்றைய சமுகத்தின் முகத்திரைகளை உன்னிப்பாக கவனித்து உய்வித்திருக்கின்றார் நெருப்பு வாசல் வழியாக.

நூலாசிரியர் அன்புடீன் “நம்பி கைவைத்த நம்பிக்கை” எனும் தலைப்பில் அவருரை அமைகிறது. இத்தலைப்பு எங்கோ இடிக்கிறது. பேணாபிடித்தவனின் நிலையை தத்ரூப வடிவில் நூலை வெளியிடும் நிலைபற்றியும், எழுத்தாளனுக்கு சமுதாயத்திலிருக்கின்ற எதிர்க்கைகளை ஒருங்கே அமைத்து தனது கடந்தகால வாழ்க்கையில் பல்வேறுபட்ட சமுதாயத்தினரின் வாழ்வுடன் இரண்டரக் கலந்துவிட்ட நினைவாடல்கள் ஊடாக தன்னுள் ஏற்பட்ட நெருடல்களை கதைகளாக வடித்தெடுத்து எழுத்துருவம் கொடுத்து, தாம்பெற்ற சுகவிசாலங்களை சுவைபட கடைந்தெடுத்து நூலாக வடித்த இந்த நெருப்பு வாசல் எவ்வளவு துன்பம் நிறைந்தது என்பதை கூறாமலே கூறுகின்றாரா? தலைப்பினுள் இவ்வளவு விடயங்களை எத்தனை ஆண்டுகள் கடத்திவந்துள்ளார் என்பதனால்தானா கவிஞன் என்பவன் தன்னிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கூறுவது!

தொகுப்புக்குள் நுழைந்தால் அங்கே பதினான்கு சிறுகதைகள் அச்சொட்டாகத் தெரிகிறது. “ஒருகிராமத்துச் சிறுமி அசைபோடுகிறாள், கடல் நீரின் கண்ணீர், மலந்தும் மலராத ஒரு மல்லிகையின் மனவெளி, உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின், ஒருதலை ராவணன், நெருப்பு வாசல், அமைதி மூழ்கிய பேரழுகை, ஒரு மழைநாள், சலனம் சபலம் சபதம், வீணான கோழிக்குறுக்கும் கோதான கோழி முட்டையும், தேவதைகள் சாவதில்;லை, குணம், அழகின் விலை, பருந்துகள்” என அவை வாசலுக்குள் செல்கின்றன. 

1975ஆம் ஆண்டில் தான் எழுதிய ஒருகிராமத்துச் சிறுமி அசைபோடுகிறாள் கதையூடாக கட்டாயக் கல்வி பற்றியும், சிறுவர் மீதான கல்வி உரிமைகளையும்;, கல்வி மேம்பாட்டையும் விபரிக்கும் கதாசிரியரின் முற்போக்குச் சிந்தனை கல்வியிலளார்களையும் மிஞ்சிவிடுகிறது. “நல்லாப்படிக்கனும் எண்டு எங்கு உம்மாவுக்கு கொள்ளை ஆசை. ஏனெண்டால் இதாருமே எங்கட குடும்பத்தில  படிச்சதில்ல…” எனும் சிறுமியின் கல்விமீதான பற்றினை எடுத்தாண்டு குடும்பச்சுமை, ஏழ்மை வாழ்வின் காலச்சக்கரத்தை கொண்டு செல்லும் பாணியோ தனிப்பாணி. பிரதேச மொழிவழக்கு, எடுத்துக் கொண்ட கதாபாத்திரத்தின் நடையுடை பாவனை, கதைக்கான தளங்களின் பற்று, கிராமத்தின் இயற்கையெழில் கொஞ்சும் அழகும், அதன் கம்பீரத்தோடு இணைந்து அசைபோடும் உயிரோட்டம் நிறைந்த சம்பவங்கள் உண்மைத்தன்மையின் விசுவாசத்தை அப்பட்டமாக கொண்டுவருவது மட்டுமன்றி வாசிக்கத்தூண்டும் பரவசத்தையும் முன்கொணருகிறார் காதாசிரியர் ஆசுகவி. 

இத்தகைய வெளியீடுகளை வெளிக்கொணர்வதிலுள்ள பிரசவ வேதனைகளையும் தாண்டி நம்பிக்கையுடன் “நெருப்பு வாசல்” சிறுகதைத் தொகுதியினை கலாபூஷணம் ஆசுகவி எதிர்வரும் 2012.02.20ஆம் திகதி அட்டாளைச்சேனையில் வெளியிடுவதன் மூலம் சிறுகதை உலகில் நுழைகின்றார். தென்கிழக்கின் சிறுகதையாசிரியர்களுள் தனிமுத்திரை பதிப்பார் ஆசுகவி அன்புடீன். இவரின் முயற்சிகள் தொடர இலக்கிய உலகினுள் இளையவர்களும் உட்புக ஆசுகவி போன்ற கவிஞர்களின் கள்ளமில்லாச் சொறிவுகள் தளைத்தோங்க இவரது வெளியீடுகள் சிறப்பாய் அமைய, நாமும் வாழ்த்தி அன்றைய நிகழ்வுகளில் பங்காற்றி வாசிப்பின் மகிமையை, மொழியின் மேன்மையை சிறப்பிக்க உதவிடுவதே இவர் போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் செயலாக அமையும் என்பதே எமது நம்பிக்கை.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452