Published On: Friday, February 24, 2012
அட்டாளைச்சேனையில் வீட்டை உடைத்து பணம் கொள்ளை

(தென்கிழக்கு செய்தியாளர்)
அட்டாளைச் சேனைப் பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்வேறு கொள்ளைச் சம்பங்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்றிரவு 23ஆம் திகதி அட்டாளைச்சேனை, டீன்ஸ் வீதியிலுள்ள நிஸார் என்பவரது வீட்டிலிருந்து சுமார் 5 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பணத்தையும் மற்றும் பல பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
சம்பவம் நடைபெற்ற அன்று, மாலை 7 மணியளவில் உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று இரவு 10 மணிக்கு வீடு திரும்பியபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் அலங்கோலமாக காட்சியளித்ததைப் பார்த்த வீட்டார் தாம் வெளியே செல்வதை அவதானித்திருந்த சமயம் பார்த்து கொள்ளையர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று அலுமாரியையும் மற்றும் தளபாடங்களையும் புரட்டிவிட்டு பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
தன்னிடமிருந்த உழவு இயந்திரத்தை விற்ற அன்றைய தினமே இச்சம்பவம் நடைபெற்றதாகவும் வீட்டின் உரிமையாளர் மேலும் தெரிவித்தார். இது சம்பந்தமாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்ததையடுத்து அடுத்து பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

