Published On: Monday, February 27, 2012
பாகிஸ்தானில் பின்லேடன் வசித்த கட்டிடம் இடிப்பு

பாகிஸ்தானில் அல்கய்தா தலைவன் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த 3 மாடி கட்டிடம் நேற்று முன் தினம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாக இருந்த பின்லேடனை அமெரிக்க படை வலைவீசி தேடியது. அவன் பாகிஸ்தானின் அபோதாபாத் பகுதியில் பதுங்கியிருப்பதை அமெரிக்க உளவு படை கண்டுபிடித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மே 2ம் தேதி பின்லேடன் பதுங்கியிருந்த 3 மாடி கட்டிடத்தை சுற்றி வளைத்த அமெரிக்க படையினர், அவரை சுட்டுக் கொன்றனர். பின்னர், அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட பின்லேடன் உடலை கடலில் புதைத்ததாக அமெரிக்கா தெரிவித்தது.
பின்லேடன் கொலைக்குப் பின்பு, அவன் வசித்த கட்டிடத்தை ஏராளாமானோர் சென்று பார்வையிட்டனர். அங்கு தீவிரவாத இயக்கத்தினர் நினைவு சின்னம் அமைத்து விடும் வாய்ப்புள்ளதால், அதை இடிக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா வற்புறுத்தி வந்தது. இதனால், 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள அந்ந கட்டிடம் இடிக்கப்பட்டது. அங்கு எந்த அசம்பாவிதம் நடக்காத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

