Published On: Tuesday, February 07, 2012
காதலனுடன் கருத்து முரண்பாடு; காதலி தீக்குளித்து மரணம்

(ப்ரியா அன்டனி)
வெளிநாட்டிலுள்ள காதலனுடன் தொலைபேசியில் கதைக்கும்போது இருவருக்கு மிடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் காதலியான கொழும்பைச் சேர்ந்த ரசிகா சுதர்ஷனி (வயது 21) தீயிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எரிகாயங்களுக்குள்ளான மேற்படி யுவதி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.