எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, July 10, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 07, 2012

பிலிப்பைன்சில் பயங்கர பூகம்பம்; 44 பேர் பலி

Print Friendly and PDF


பிலிப்பைன்ஸ் நாட்டில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 6.8 புள்ளிகளாக பதிவானது. கட்டிடங்கள், பாலங்கள் இடிந்தன. இடிபாடுகளில் சிக்கி 44 பேர் பலியாயினர். மத்திய பிலிப்பைன்சில் நெக்ரோஸ் தீவில் உள்ள கைகுல்கன் நகரத்தில் நேற்று காலை 11.49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், மலைப்பிரதேசமான சோலோங்கன், பிலானாஸ், செபு நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 புள்ளிகளாக பதிவானது. பல இடங்களில் கட்டிடங்கள், பாலங்கள் இடிந்தன. நிலநடுக்கம் கடுமையாக இருந்த பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்ததில் மொத்தம் 44 பேர் பலியானதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்களில் 2 குழந்தைகளும் அடங்குவர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.  

இது பற்றி நெக்ரோஸ் மேயர் எர்னஸ்டோ ரேயாஸ் கூறுகையில், ‘நிலநடுக்கத்தால் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. சுமார் 40 பேர் காணவில்லை. நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்’ என்றார். நிலநடுக்கத்தால் கடலோர பகுதிகளிலும் பலத்த சேதம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கை விடுத்தது. பின்னர், அதை வாபஸ் பெற்றது. எனினும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. அமெரிக்க புவியியல் மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘நெக்ரோஸ் மாகாணத்தில் துமாகேட் நகரின் வடக்கே 70 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம் சுமார் 46 கி.மீ. தூரத்திற்கு அதிர்வை ஏற்படுத்தியது’ என கூறப்பட்டது.


அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452