எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, May 29, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 28, 2012

மாணவிகள் கல்வி பிச்சை கேட்டு ஆர்ப்பாட்டம்

Print Friendly and PDF


ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி முன்பு நேற்று மாணவிகள் தட்டு ஏந்தி, கல்வி பிச்சை கேட்கும் போராட்டத்தை நடத்தினர். குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி உள்ளது. இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான அனுமதியை மத்திய அரசு திடீரென ரத்து செய்தது. ஆனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மாணவர்கள் சேர்க்கைக்கான அனுமதியை பெற்றது. அதன்படி மாணவர்கள் சேர்க்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை வகுப்புகள் தொடங்கவில்லை.

போதிய அடிப்படை வசதிகள், பேராசிரியர்கள் இல்லாததால் வகுப்புகள் தொடங்குவதற்கான அனுமதி வழங்கவில்லை என மத்திய அரசு கூறி உள்ளது. இதையடுத்து வகுப்புகளை தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசை வலியுறுத்தி மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று 7வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இதில் 15க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். 

இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நேற்று பகல் 12 மணியளவில் திடீரென மாணவிகள் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியின் நுழைவு வாயில் அருகே வந்தனர். அனைவரின் கைகளிலும் தட்டு வைத்திருந்தனர். அந்த தட்டில் கல்வி பிச்சை தாருங்கள் என எழுதி இருந்தனர். பின்னர் தட்டை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

இது குறித்து மாணவிகள் கூறுகையில், ‘‘எங்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி இருக்கிறது. 1 வருட படிப்பு பாழாய் போகும் நிலை உள்ளது. எனவே அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கை மூலம் மத்திய அரசு கூறியபடி அடிப்படை வசதிகள் மற்றும் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்பி வகுப்புகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு கல்வி பிச்சை அளிக்க வேண்டும். அதற்காகவே இந்த போராட்டம்‘‘ என்றனர்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452