எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Monday, May 12, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, March 09, 2012

மகளுடன் சேர்ந்து பிளஸ் - 2 பரீட்சை எழுதும் தந்தை

Print Friendly and PDF


(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது) 
பிளஸ் 2 பொதுத்தேர்வை மகளுடன் சேர்ந்து தந்தையும் எழுதுகிறார். 2 ஆண்டுகளுக்கு முன் இதேபோல் 10ஆம் வகுப்பு தேர்வை எழுதினார். நாகை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடியை சேர்ந்தவர் குஞ்சு மகன் மாரிமுத்து (வயது 39). சாலை பணியாளர். இவரது மனைவி மகேஸ்வரி (வயது 36). இவர்களுக்கு கடந்த 1994ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர்.


இவர்களது மூத்த மகள் சுபஸ்ரீதேவி (வயது 17), சீர்காழியில் உள்ள சியாமளா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்கியது. சுபஸ்ரீதேவியின் தந்தை மாரிமுத்துவும் தனித்தேர்வராக நேற்று பிளஸ் 2 தேர்வு எழுதினார். இவர் வரலாறு பிரிவு பாடத்தை எடுத்துள்ளார். தேர்வுக்காக மகளுடன் சேர்ந்து, கடந்த சில நாட்களாக தீவிரமாக படித்து வந்தார். நேற்று தேர்வு எழுதுவதற்காக உற்சாகமாக சென்ற மாரிமுத்து கூறியதாவது;

நான் கடந்த 1997இல் சாலை பணியாளராக பணியில் சேர்ந்தேன். பதவி உயர்வுக்காக படித்து வருகிறேன். மகளுடன் சேர்ந்து 2010ல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினேன். சுபஸ்ரீதேவி 447 மதிப்பெண் பெற்றார். நான் ஒரு பாடத்தில் தோல்வியடைந்து, அடுத்தமுறை எழுதி தேர்ச்சி பெற்றேன். இப்போது பிளஸ் 2 பொதுத்தேர்வையும் மகளுடன் எழுதுவது மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால், 10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தது போல் இருக்காது. முழு முயற்சியுடன் படித்துள்ளேன். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. படிப்புக்கு வயது தடையல்ல. தேர்வுக்கு படிப்பதற்கு என் மனைவி மகேஸ்வரி மிகுந்த ஊக்கமளித்தார். 

பிளஸ் 2 முடித்தபின், பட்டப்படிப்பை படித்து, பதவி உயர்வையும் பெறுவேன். இவ்வாறு மாரிமுத்து நம்பிக்கையுடன் கூறினார். அதன்பின் மகளுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரை சீர்காழி பள்ளி தேர்வு மையத்தில் விட்டுவிட்டு, தனது தேர்வு மையம் உள்ள மயிலாடுதுறை செயின்ட் பால்ஸ் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு மாரிமுத்து புறப்பட்டு சென்றார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452