எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Tuesday, May 27, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, March 08, 2012

வினோத்குமார் மரணத்தில் நடந்தது என்ன? - அல்போன்சா பேட்டி

Print Friendly and PDF


நடிகை அல்போன்சாவின் காதலன் வினோத் குமார் மர்ம மரணத்தை தொடர்ந்து, அதிகளவில் தூக்க மாத்திரை தின்ற நடிகை அல்போன்சா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்த நிலையில், காதலரின் மரணம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன.

நேற்று காலை 7 மணிக்கு, மருத்துவமனையில் இருந்து நடிகை அல்போன்சா வீடு திரும்பினார். அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து...

உங்கள் திருமண வாழ்க்கை குறித்து...

எனக்கும், நோபலுக்கும் 2005ல் திருமணம் நடந்தது. அதன்பின் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டேன். துபாயில் தங்கியிருந்தோம். அவர் நடத்திய வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே, பணப் பிரச்னை ஏற்பட்டது. நான் குழந்தையுடன் விருகம்பாக்கம் சீப்ராஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கினேன். 2010ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, என் சகோதரன் டான்ஸ் மாஸ்டர் மனோஜ், நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது வினோத் குமாரும் உடன் வந்தார். அனைவரும் பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்திற்கு சென்று வந்தோம்.

வினோத் குமாருடன் அறிமுகம் பற்றி?

என் தோழியும், டான்சருமான மஞ்சுவும், வினோத் குமாரும் நண்பர்கள். இருவரும் அடிக்கடி என் வீட்டிற்கு வருவார்கள். அப்போது மோதிரம் ஒன்றை மஞ்சு எனக்கு பரிசளித்தாள். அந்த மோதிரத்தை தான் போட்டு விடுவதாக கூறி, வினோத் குமார் என் கை விரலில் போட்டு விட்டார். சின்ன பையன் தானே ஆசைப்படுகிறான் என பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அறிமுகம் காதலாக மாறியதா?

ஆமாம். கடந்தாண்டு காதலர் தினத்தன்று சந்தித்த வினோத் குமார், தனியாக அமர்ந்திருக்கும் பெண் பொம்மை ஒன்றை பரிசாக தந்து காதலை வெளிப்படுத்தினார். கணவரிடம் இருந்து விலகியிருந்த எனக்கும் அவர் மீது காதல் ஏற்பட்டது.

உங்கள் வீட்டில் வசிக்க வந்தது எப்போது?

ஆரம்பத்தில் அவர் சினிமா வாய்ப்பு தேடிய போது, வளசரவாக்கத்தில் தங்கியிருந்தார். கடந்த ஆறு மாத காலத்திற்கு முன் என்னுடனேயே தங்கினார். அவருக்கு புட்டு பிடிக்கும். நான் அதை அவருக்கு அடிக்கடி செய்து கொடுப்பேன். சினிமாவில் அவர் வெற்றி பெற முடியாமல் போனதும் மனக் கஷ்டத்தை கொடுத்து வந்தது.

திருமணம் குறித்து பேசினாரா?

விரைவில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறுவார். ஆனால், நோபலுடன் முறைப்படி விவாகரத்து பெறாவிட்டால், அவர் பிரச்னை செய்ய வாய்ப்பிருந்ததால், விவாகரத்துக்கு பின்னரே திருமணம் என கூறி வந்தேன். திருமணத்திற்கு சாட்சியாக குழந்தை ஒன்றை பெற்றுக் கொள்வோம் என கூறினார்.

வினோத் உடனான காதல் உங்கள் கணவருக்கு தெரியுமா?

கடந்தாண்டு என் கணவர் வந்திருந்தார். அப்போது என்னை அழைத்து சென்று விடுவாரோ என்ற அச்சத்தில், வீட்டின் குளியலறையிலேயே வினோத் குமார் தங்கியிருந்தார். நான் வினோத் குமாரை திருமணம் செய்ய போவதாக நோபலிடம் கூறினேன். அவர், செத்து விடுவதாக கூறினார். ஆனால், துபாய்க்கு அழைத்து செல்ல மறுத்து விட்டார். குழந்தையை பற்றியும் அவருக்கு கவலை இல்லை. நான் மறுமணம் செய்வது குறித்து உறுதியாக கூறி, அனுப்பி வைத்தேன்.

வினோத் குமார் பெற்றோரின் சம்மதம் கிடைத்ததா?

தெரியவில்லை. ஆனால், என் வீட்டில் வினோத் குமாரின் அம்மா வந்து தங்கியுள்ளார். ஒரே படுக்கையில் நான், வினோத் குமார், அவரது அம்மா, என் குழந்தை நால்வரும் ஒன்றாக படுத்து உறங்கியுள்ளோம். எங்கேயும் காதல் என்ற படம் பார்க்க சேர்ந்து தியேட்டருக்கு சென்றோம். திருமணம் செய்வது குறித்து அவரது அம்மாவிற்கு தெரிந்திருக்க வேண்டும். இருப்பினும் அவர்கள் தரப்பில் என்னை ஏற்க விரும்பவில்லை என்றே நினைக்கிறேன்.

அடிக்கடி அம்மாவிடம் பணம் வாங்கி செலவு செய்யும் பழக்கம் வினோத் குமாருக்கு உண்டு. சினிமாவிலும் பெரிதாக வெற்றி பெற முடியவில்லை. ஒரு முறை வீட்டில் இருந்த சில்லரை பணத்தை கொண்டு செலவு செய்ய நேரிட்டது. இந்த சூழ்நிலையில், மீண்டும் நடன நிகழ்ச்சிக்கு செல்வது என முடிவு எடுத்தேன். துபாய் ஓட்டலில் நடன நிகழ்ச்சிக்கு செல்வதை உறுதி செய்தேன்.

இதை வினோத் குமார் ஏற்றுக் கொண்டாரா?

ஏற்றுக் கொள்ளவில்லை. இருப்பினும், அவரது அம்மாவிடம் இருந்து பணம் வாங்கி செலவு செய்வதை நான் விரும்பவில்லை. சில நடன நிகழ்ச்சிகளுக்கு பின், ஏதாவது ஒரு தொழில் துவங்கி விடுவோம் என கூறினேன். கடந்த மாதம் 15ம் தேதி, நான் துபாய்க்கு புறப்பட்டேன். என்னை விமான நிலையம் வரை வந்து அனுப்பி வைத்தார்.

துபாயில் கணவரை சந்தித்ததாக கூறப்படுகிறதே...

விவாகரத்து பெறுவது தொடர்பாக சந்திக்கும் திட்டம் இருந்தது உண்மை தான். ஆனால், அவரை சந்திக்க இயலவில்லை. சீக்கிரம் சென்னைக்கு வந்து விடு பாப்பா என அடிக்கடி தொலைபேசியில் கூறிய வினோத் குமார், என் குழந்தையை அன்புடன் பார்த்துக் கொண்டார். குறிப்பாக மது அருந்தவோ, நண்பர்களை பார்க்கவோ வெளியே செல்லவில்லை. துபாயில் தங்கிய 15 நாட்களில் என்னுடன் வினோத் குமார் போனில் பேசியது மட்டுமே 50 ஆயிரம் ரூபாய் வரை இருக்கும்.

எப்போது திரும்பி வந்தீர்கள்?

கடந்த 3ம் தேதி சென்னை திரும்பினேன். அன்றைய தினம் இரவு மீண்டும் துபாய் செல்ல வேண்டாம் என வினோத் குமார் கூறினார். நானும் சம்மதித்தேன். என் பாஸ்போர்ட்டை எரித்தார். மூவரும் இறந்து விடுவோமா எனவும் கேட்டார். என்னை பிரிந்த கவலையில் இருந்தார். பின் சமாதானத்துடன் அன்றைய தினம் கழிந்தது.

4ம் தேதி நடந்தது என்ன?

காலை 10.30 மணிக்கு தான் எழுந்தோம். மாலை கடற்கரைக்கு செல்வோம் என வினோத் குமார் கூறினார். அலைச்சல் காரணமாக நான் பகலில் தூங்கினேன். மாலை 5 மணிக்கு எழுப்பினார். நேரமாகி விட்டதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என முடிவு எடுத்தோம். பின் சிக்கன் வாங்கி வந்தார். தோசையும், சிக்கன் குழம்பும் செய்ய சொன்னார். என்னை வெள்ளை புடவை அணிய சொன்னார். தன் அம்மா புடவையை தூக்கி இடுப்பில் செருகுவது போல் செய்ய சொன்னார்.

சேலை அணிந்து பின் சமைத்துக் கொடுத்தேன். இடையில் அவர் அம்மாவுடன் போனில் பேசினார். அப்போது காரசாரமாக பேசியதாக தெரியவில்லை. எங்களது திருமணத்திற்கு அவரது வீட்டிலும் எதிர்ப்பு இருந்துள்ளது. பின் அவரும், குழந்தையும் சாப்பிட்டனர். எனக்கு ஒரு தோசை ஊட்டி விட்டார். மறுநாள் தன் அம்மா வந்து விடுவார் எனவும், பிரச்னையெல்லாம் சரியாகிவிடும். அம்மா கொண்டு வரும் ஐந்து புடவைகள் நீ கட்டிக்க வேண்டும் என்றார்.

வெள்ளை நிற சேலையிலேயே அன்றைய தினம் கழிந்தது. பின், பாத்ரூம் சென்று வருவதாக எழுந்து சென்றார். சில நிமிடங்கள் கழித்து, டவலை கட்டிக் கொண்டு நான் பாத்ரூம் சென்று பார்த்த போது அங்கு இல்லை. மற்றொரு படுக்கையறையில் வினோத் குமார் தூக்கில் தொங்கியபடி இருந்ததை பார்த்தேன். அவர் உயிருக்கு போராடிய நிலையில் தொங்கினார். அவரது கால்களை தாங்கி தூக்கி பிடித்தேன். கைகள் துடித்தவண்ணம் இருந்தன. வாயில் ரத்தம் வழிந்தது. அப்போது நான் ஓடிப்போய், கத்தியை எடுத்து வந்து தூக்கு போட்ட பேன்டை அறுத்தேன்.

உதவிக்கு யாரும் இல்லையா?

சத்தம் போட்டு அழைத்தும் பக்கத்து வீடுகளில் இருந்து யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. யாரேனும் உடனடியாக உதவி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம். பாதுகாப்பில் இருந்த செக்யூரிட்டிகளே அரை மணி நேரம் கழித்தே வந்தனர். வெகுநேரத்திற்கு பின், எதிர் வீட்டில் வசிக்கும் பெண் டாக்டர் வந்தார். அவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல கூறினார். அதன் பிறகே, ஆம்புலன்சுக்கு போன் செய்தேன்.

வினோத் குமார் குடும்பத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுத்தேன். வினோத் குமாரின் உறவினர்கள் வந்தனர். வினோத் குமாரின் சகோதரன் மோகன் என்னை கன்னத்தில் அறைந்தார். பின், விருகம்பாக்கம் போலீசாரிடம் நடந்த விவரத்தை கூறினேன். அழுது கொண்டிருந்த நான் 35 தூக்க மாத்திரைகளை சாப்பிட்டேன். இவ்வாறு நடிகை அல்போன்சா கூறினார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452