எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Wednesday, May 07, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Sunday, March 11, 2012

உத்தரபிரதேச முதல் மந்திரியாக அகிலேஷ் யாதவ்

Print Friendly and PDF


(இந்தியாவிலிருந்து சாஹுல் ஹமீது) 
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல்வர் என்ற பெயரை தட்டி செல்கிறார் அகிலேஷ்சிங் யாதவ். இன்று காலையில் லக்னோவில் நடந்த சமாஜ்வாடி கட்சியின் கூட்டத்தில் முலாயம்சிங் மகன் அகிலேஷ் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இவரே இம்மாநிலத்தின் முதல்வராக கட்சி விரும்புவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் மூத்த உறுப்பினரான ஆஷாம்கான் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் கட்சி உறுப்பினர்களின் அமோக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முலாயம்சிங்கும் பங்கேற்றார். இந்த முடிவை வரும் கவர்னரிடம் தெரிவிப்பார். தொடர்ந்து ஆட்சி அமைக்க அகிலேஷவுக்கு கவர்னர் அழைப்பு விடுப்பார். தொடர்ந்து வரும் திங்கட்கிழமை அவர் முதல்வராக பதவியேற்பார் என்று தெரிகிறது.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்திர பிரதேசத்தில் நாட்டிலேயே பொறுப்பு வகிப்போர்களில் இளம் முதல்வர் என்ற பெயரை தட்டி செல்லவிருக்கிறார் அகிலேஷ்சிங் யாதவ். இம்மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் சமாஜ்வாடி கட்சி பெருவாரியான 226 தொகுதிகளை கைப்பற்றி முழு மெஜாரிட்டியுடன் ஆட்சியில் அமர்கிறது.

இந்த கட்சிக்கு தலைவர் பொறுப்பை உடல் நலம் காரணமாக மகனுக்கு கொடுத்து ஒதுங்கியே இருந்தார். தேர்தல் துவங்கியது முதல் முடியும் வரை அகிலேஷ்தான் மாநிலம் முழுவதும் மூலை, முடுக்கெல்லாம் சென்று பிரசாரம் செய்தார். இவரது கட்சி சின்னமான சைக்கிளில் பல இடங்களில் நடத்திய பேரணியில் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். நேதாஜி என்றழைக்கப்படும் முலாயம்சிங் மகன் என்ற பாசம் மக்கள் மத்தியில் அதிகம் இருந்தது . இதனை விட சுறு, சுறுப்பு, சிரித்த முகம், தொண்டர்களிடம் நெருங்கி பழகுதல், மேடையில் இருந்தபடியே ஏழைகளிடம் பாரபட்சம் இல்லாமல் நலம் விசாரிப்பது என இவரது ஸ்டைல் மக்ககளை வெகுவாகவே கவர்ந்தது. குறிப்பாக பத்திரிகையாளர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பவர். இதனால் அவருக்கான கவரேஜ்கள் பிரம்மாதமாக அமைந்திருக்கும்.

நடந்து முடிந்த தேர்தலில் ராகுலுக்கும், அகிலேசுக்கும் இடையே தான் போட்டி பிரசாரமாக மாநிலம் முழுவதும் காணப்பட்டது. அகிலேஷ் உழைப்புக்கு பயனாக தேர்தல் முடிவுகள் சமாஜ்வாடி கட்சிக்கு முழு சாதகமாக அமைந்தது. மாயாவதி கட்சி மண்ணை கவ்வியது.

இளம் எம். எல்.ஏ.,க்கள் விரும்புகின்றனர் : தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் கூட அனைத்து மீடியாக்களும் முலாயம்சிங்கை விட மகன் அகிலேஷின் பேட்டிக்கே முக்கியத்துவம் அளித்தது. இந்நிலையில் சட்டமன்ற கூட்டம் இன்று நடக்கிறது. இதில் சட்டமன்ற தலைவராக அகிலேஷ்சிங் தேர்வு செய்யப்படடுவார் என இம்மாநிலத்தில் பேசப்படுகிறது. ஆனால் தந்தையும், மகனும் , யார் தேர்வு செய்யப்படுவர் என்பதில் சற்று ஓப்பனாக பேசாமல் தந்தை, கட்சி முடிவு செய்யும் என்றும், முலாயம்சிங்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்று மகனும் சொல்லி வருகின்றனர்.

அகிலேஷ் பொறுப்புக்கு வரட்டும், இது தான் சரியான தருணம் என்கின்றனர் இளைய தலைமுறையினர். இளம் எம்.எல்.ஏ.,க்களும் இதனைத்தான் எதிர்பார்க்கின்றனர். இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் இக்கட்சி கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மூலம் தெரிந்து விடும். அகிலேஷ் தேர்வு செய்யப்பட்டால் இது வரை இந்த இளம் வயதில் (38 வயது) முதல்வர் பொறுப்பை யாரும் ஏற்றதில்லை என்ற பெயரும், இளம் முதல்வர் என்ற பெயரும் இவருக்கு கிடைக்கும்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452