எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Friday, May 30, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, March 10, 2012

இலங்கைக்கு எதிரான முயற்சிகளை முறியடிக்க இத்தாலியில் ஆர்ப்பாட்டம்

Print Friendly and PDF


இலங்கைக்கு எதிரான சர்வதேச சதித் திட்டங்களுக்கு எதிராக குரல் எழுப்புவோம் எனும் தொனிப்பொருளின் கீழ் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று முன்தினம் இத்தாலியின் ரோம் நகரில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாக கோஷம் எழுப்பியதுடன் இலங்கைக்கு எதிராக சதித் திட்டங்களை தீட்டிவரும் சர்வதேச சக்திகளுக்கு எதிராகவும் குரல் எழுப்பினர்.

இலங்கையில் இன, மத பேதமின்றி பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிர் களை காவுகொண்டு ஆயிரக்கணக் கானோரை அங்கவீனர்களாகவும் மாற்றிய பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி நாட்டிலே நிரந்தர சமாதானத்தை யும் அமைதியான சூழ்நிலையினையும் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் சிறந்த வழிகாட்டல் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு அவர்கள் தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் 2010 ஆம் ஆண்டிலே நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8% வீதமாகக் விருத்தி கண்டுள்ளதாகவும், நாட்டிலே பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக மாற்றியமைப்பதற்காக விமான நிலையங்கள் துறைமுகங்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் என்பவற்றினை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கத்திற்கு நாம் பூரண ஆதரவினைத் தெரிவிப்பதாகவும் அவர்கள் கூறினர்.

எமது தாய் நாட்டிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் சதித் திட்டங்கள், சூழ்ச்சிகள் என்பவற்றிற்கு எதிராக நாம் உலகின் எங்கிருந்தாலும் அணிதிரண்டு தாய் நாட்டை பாதுகாப்பதற்கு உறுதி பூண்டுள்ளதாகக் கூறும் அவர்கள் எதிர்வரும் நாட்களில் இத்தாலியின் மிலானோ, பிரெஞ்சி, நாபொலி, கட்டானியா, வெரொனா ஆகிய நகரங்களிலும் பாரிஸ் நகரிலும் மற்றும் லண்டன் நகரிலும் பாரிய ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக ஐரோப்பிய நாடுகளின் இலங்கை ஒன்றிய ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452