எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Monday, August 29, 2011

லண்டனில் வெடிகுண்டு புரளி; பீதியில் இந்திய வீரர்கள்

Print Friendly and PDF

இந்திய வீரர்கள் தங்கிய அறையில் வெடிகுண்டு இருப்பதாக லண்டன் பொலிஸார் சோதனை நடத்தியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஒரே ஒரு "டுவென்டி-20' மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. "டுவென்டி-20' போட்டி வரும் 31ம் தேதி மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. இதற்கு முன்னதாக, கடந்த 26ம் தேதி கென்ட் அணிக்கு எதிராக பயிற்சி போட்டியில் விளையாடியது. இப்போட்டியின் போது, இந்திய வீரர்களின் "டிரஸ்சிங் ரூமில்' சந்தேகத்துக்கு இடமான பொருள் இருப்பதாக கூறப்பட்டது. இது வெடிகுண்டாக இருக்கும் என லண்டன் பொலிஸார் சந்தேகித்தனர்.

உடனே இந்திய வீரர்களை மைதானத்துக்குள் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். பின் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இறுதியில் வெடிகுண்டு புரளி என்பது தெரிய வந்தது. 

பயிற்சி ஆட்டம்:
இதற்கிடையே லீசெஸ்டர் நகரில் இன்று நடக்கவுள்ள "டுவென்டி-20' பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி, லீசெஸ்டர்ஷையர் அணியை எதிர்கொள்கிறது. இதற்கான பயிற்சியின் போது "மீடியாவை' அனுமதிக்கவில்லை. இதற்கு கென்ட் அணிக்கு எதிரான போட்டியின் போது ஏற்பட்ட வெடிகுண்டு பீதியே காரணம் என தெரிகிறது. 

இதுகுறித்து பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெடிகுண்டு பீதி காரணமாகவே மைதானத்திற்குள் "மீடியாவை' அனுமதிக்க வேண்டாம் என, இந்திய அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் கேட்டுக் கொண்டார்,'' என்றார்.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452