Published On: Thursday, March 08, 2012
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் புதிய பணிப்பாளர்கள் நியமனம்
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் புதிதாக இரண்டு பணிப்பாளர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு அண்மையில் மஹரகமவில் உள்ள தலைமைக் காரியாலத்தில் இடம்பெற்றது. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேராவினால் வழங்கிவைக்கப்பட்டது. ஆஜித் நாரங்கல செயலாற்றுப் பணிப்பாளராகவும் மிலந்த ராஜபக்ஷ உழைக்கும் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் எதிர்காலத்திட்டங்களைக் கருத்திற் கொண்டு இந்நியமனம் வழங்கப்கட்டது என மன்றத்தின் தலைவர் தெரிவித்தார். இவர்கள் இருவரும் தங்களது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.