Published On: Thursday, March 08, 2012
இலங்கைக்கு எதிரான பிரேரணை இன்று சமர்ப்பிப்பு
இலங்கைக்கு எதிரான பிரேரணையை அமெரிக்கா இன்று ஐ.நா. சபையின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது. இப்பிரேரணையில், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுலாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி பிரேரணை நாடுகளின் வாக்களிப்புக்கு உட்படுத்தப்படலாம் எனவும் தெரியவருகின்றது.