Published On: Sunday, March 11, 2012
கல்முனைஅல்-பஹ்றியா மகா வித்தியாலய இல்ல விளையாட்டுப் போட்டி
(நப்றிஸ்)
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி வெள்ளிக்கிழமை கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. கல்லூரி அதிபர் எம்.எச். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் கலந்து சிறப்பித்தார்.
இப்போட்டிகளின்போது பாடசாலை மாணவர்களின் அணிவகுப்பு, வினோத உடைப்போட்டி மற்றும் சிறுவர் நிகழ்ச்சிகளும் இங்கு இடம்பெற்றது. இந்த இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுக்கு அதிதிகளாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம். ஜெலீல், ஓய்வு பெற்ற விளையாட்டு உத்தியோகஸ்தர் எம்.எச். நபார், அட்டாளைச்சேனை கல்விக்கல்லூரி விரிவுரையாளர் மன்சூர், கல்முனை முதல்வரின் ஆலோசகர் ஏ.பீர்முஹம்மட் உட்படப்பலரும் கலந்து கொண்டனர்.