Published On: Wednesday, December 28, 2011
சிங்கப்பூரில் புத்தாண்டை கொண்டாடுகிறார் அஜித்

நடிகர் அஜித், 2012ஆம் ஆண்டு புத்தாண்டு தினத்தை சிங்கப்பூர் சென்று குடும்பத்துடன் கொண்டாடி மகிழவிருக்கிறார். மங்காத்தா படத்திற்கு பிறகு, நடிகர் அஜித் பில்லா 2 சூட்டிங்கில் கடந்த சில மாதங்களாகவே பிஸியாக ஈடுபட்டு இருந்தார். படவேலைகள் பாதிக்கு மேல் முடிந்துள்ளன. தற்போது புத்தாண்டு தினத்தையொட்டி படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி உள்ளார்.
இதனால் இரண்டு வாரங்கள் ஓய்வுக்காக சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார் நடிகர் அஜித். கூடவே அவருடைய மனைவி ஷாலினியும், மகளும் சென்றனர். இரண்டு வாரங்கள் மலேசியா, சிங்கப்பூரில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் செய்கிறார். சிங்கப்பூரில் புத்தாண்டு தினத்தை கொண்டாட முடிவு செய்துள்ளார். படப்பிடிப்பில் பிசியாக இருந்ததால் குழந்தையை அடிக்கடி பார்க்க முடியவில்லை என்ற வருத்தம் அஜித்துக்கு இருந்தது. குழந்தைக்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்து விட்டு சென்னை திரும்பும் அஜித், மீண்டும் பில்லா 2 சூட்டிங்கில் பங்கேற்பார் எனத் தெரிகிறது.