எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Thursday, January 26, 2012

'நண்பன்' படத்திற்கு வந்த புதிய சோதனை

Print Friendly and PDF


பிரச்சினையிலிருந்து இன்னும் இயக்குநர் ஷங்கர் முழுவதும் வெளிவராமல் முழித்துக் கொண்டிருக்க, புது பிரச்சனை கிளம்பிக் கொண்டிருக்கிறது. விருமாண்டி சந்தானம் என்ற சத்யராஜ் கேரக்டர் வீட்டு வாசலில் இருக்கும் பெயர் பலகையை சிதைத்து அதில் மூத்திரம் போவது போன்று ஷாட் இருக்கிறது அதுதான் பிரச்சினை; தேவர்களின் ஓரு பிரிவினர் பயபக்தியுடன் கும்பிடும் சாமி ‘‘விருமாண்டி’’ அதை எழுதி வைத்து அதில் டைட் ஷாட்டில் மூத்திரம் போவது எங்கள் சாமியை அவமதிப்பதாகும் என்று சிலர் குமுறுகிறார்கள்? 

இதில் என்ன தப்பு என்று அவர்களிடம் கேட்க? திருப்பதி, வெங்கடாஜலபதி, அய்யப்பன், அல்லது ஏசுராஜா என்ற பெயரில் அந்த கேரக்டர் இருந்து டைட் ஷாட்டில் அதன் மீது மூத்திரம் போவது போல ஷங்கர் எடுத்திருப்பாரா? அவர் முதல் படமே ரிசர்வேசனுக்கு எதிராக இருந்த்து. ஷங்கர் ஏதோ விஷமத்துடன் எடுத்திருக்கிறார், அதனால் அந்த ஷாட்டை உடனே நீக்க வேண்டும் என்றார்கள்.

அடடே! அவர்கள் கேள்வியிலும் நியாயம் இருக்கிறதே என்று ஷங்கர் அணியில் சிலரிடம் கேட்டோம், அவர்களோ அது படத்தில் வரும் ஒரு கேரக்டர் பெயர் அவ்வளவே, படத்திற்கு சம்பந்தமில்லாத வகையில் நாங்கள் ஓன்றும் விருமாண்டி என்று எழுதப்பட்ட கோவிலில் மூத்திரம் போவதாக காட்டவில்லையே? 

மேலும் அந்த பகுதியை சேர்ந்த வைரமுத்துவின் மகன் கார்க்கிதான் வசனம் எழுதியிருக்கிறார், அவர் அறிவுக்கு இந்த மாதிரியான சென்சிடிவ் விஷயங்கள் தெரியாதா என்ன?

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452