Published On: Friday, January 06, 2012
ஒரு நாளேயான சிசுவைக் கிணற்றில் வீசிவிட்டு தலைமறைவான விதவைப்பெண்

பிறந்து ஒரு நாளேயான தன்னுடைய சிசுவைக் கல் ஒன்றுடன் கட்டி கிணற்றுக்குள் வீசிக் கொன்றுவிட்டு பெண் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். இப்பெண்ணுக்கு ஏற்கனவே 5 பிள்ளைகள் உள்ளனர். அவரது கணவர் யுத்தத்தின்போது உயிரிழந்து விட்டார். நலன்புரி நிலையத்தில் இருந்து வெளியேறி, மீளக்குடியமர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் இவர் கர்ப்பம் தரித்துள்ளார்.
நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாததால் சந்தேகப்பட்ட அயலவர்கள், பொலிஸாருக்கு தெரியப்படுத்தினர். இதன் பின்னர் கிளிநொச்சிப் பொலிஸார் அந்தப் பகுதிக்கு சென்று நடத்திய சோதனைகளின்போது, குறித்த பெண்ணின் வீட்டுக் கிணற்றில் இருந்து பிறந்து ஒரு நாளேயான சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டது.
போர்வை ஒன்றினால் சுற்றப்பட்டு, கல்லோடு சேர்த்துக் கட்டப்பட்டு குறித்த சிசுவை தாய் கிணற்றில் வீசியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சிசுவை கிணற்றில் வீசிய பெண், தன்னுடைய ஏனைய 5 பிள்ளைகளுடன் தலைமறைவாகி விட்டார். கிளிநொச்சிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.