Published On: Tuesday, February 07, 2012
எப்போது முடியும் ? எப்போது தொடங்கும் ?

சினிமா பட அதிபர்களுக்கும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி)யை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் இடையே சம்பள உயர்வு தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு இருக்கிறது.
இரு தரப்பினர் இடையே பேச்சுவார்த்தை நடந்தபோது முழுமையான உடன்பாடு ஏற்படாத நிலையில், தொழிலாளர்கள் தங்களது சம்பளத்தை உயர்த்தி, தங்களுக்கான புதிய ஊதியத்தை நிர்ணயித்தனர்.
இனிமேல் எங்களது புதிய சம்பளத்திற்கு தான் வேலை செய்வோம் என்று அறிவித்தார்கள். இதற்கு தயாரிப்பாளர்கள் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கும் - பெப்சி சம்மேளனத்திற்கும் ஏற்பட்ட பிரச்னையால் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் 'துப்பாக்கி', 'தாண்டவம்', 'முகமூடி' என பல்வேறு பிரம்மாண்டமான படப்பிடிப்புகளும் அடங்கும்.
பெப்சி தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வடபழனியில் உள்ள இசைக்கலைஞர்கள் சங்கத்தில் உண்ணாவிரதம் இருந்தனர். இந்தப் பிரச்னை எப்போது முடியும், மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என இரு தரப்பும் குழப்பத்துடன் இருந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசு தயாரிப்பாளர் சங்கத்தையும், பெப்சியையும் கூட்டு பேச்சுவார்த்தைக்கு இன்று ( பிப்ரவரி 6 ) அழைத்துள்ளது.
இப்பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடையும் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் தொழிலாளர்கள்.