எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Tuesday, February 07, 2012

மழையுடன் கூடிய அசாதரண காலநிலை தொடரும்

Print Friendly and PDF


திடீரென ஏற்பட்டிருக்கும் கால நிலையில் மாற்றத்தினால் ஒருசில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணிநேர மழை வீழ்ச்சி பதிவுப்படி ஆகக் கூடிய மழை பொத்துவிலில் 115.5 மில்லி மீற்றர்களாக பதிவாகியுள்ளது.

காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் காரணமாக கிழக்கு, வடக்கு, வட மத்தி, ஊவா, மலையகத்தின் கிழக்கு பகுதி ஆகிய பிரதேசங்களில் இடையிடையே மழை பெய்யும். ஏனைய பிரதேசங்களில் பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி மின்னலுடன் மழை பெய்யும். இச்சமயங்களில் சிலவேளைகளில் காற்றின் வேகம் திடீரென அதிகரிக்கும் வளிமண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேநேரம் நீரேந்து பிரதேசங்களிலும் மழை பெய்துள்ளன. எனினும் மன்னார் குடா, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு ஆகிய பிரதேசங்களின் ஆழ்கடல் பரப்புகள் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

Related News
1 | 2 | 3 | 4 | 5 | 6 | Next »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »
மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452