Published On: Tuesday, February 07, 2012
தேசத்துக்கு மகுடம் கண்காட்சியில் நேற்று மட்டும் 3 இலட்சம் பேர் பங்கேற்பு

ஓயாமடுவில் நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியின் மூன்றாவது நாளான நேற்று மாத்திரம் சுமார் 3 இலட்சம் பேர் வருகை தந்துள்ளதுடன், கடந்த மூன்று நாட்களுக்குள் ஆறு இலட்சத்துக்கும் அதிகமானோர் கண்காட்சியை பார்வையிட்டுள்ளனர். இக்கண்காட்சியை பார்வையிடவென வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வருகின்றனர்.
நேற்றைய மூன்றாவது நாள் மும்மொழி அமுலாக்கல் திட்டத்திற்கு மிகவும் முக்கிய தினமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. விசேடமாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சேர்ந்த மாணவ, மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன.