Published On: Friday, February 24, 2012
இன்று நள்ளிரவு முதல் பாணின் பதிய விலை 55 ரூபா

(முஹம்மட் பிறவ்ஸ்)
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அனைத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி 450 கிராம் பாணின் புதிய விலை 55 ரூபாவாக உயர்கிறது. இந்த வாரத்துக்குள் அரசாங்கம் ஒரு இணக்கப்பாட்டுக்கு வராவிடின் பாணின் விலையை அதிகரிக்கவுள்ளதாக அனைத்து பேக்கரி உரிமையாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.