Published On: Saturday, February 25, 2012
குவைத் நாட்டின் 51ஆவது தேசியதின நிகழ்வு
குவைத் நாட்டின் 51ஆவது தேசியதின நிகழ்வு கடந்த புதன்கிழமை இலங்கையிலும் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சிரேஷ்ட அமைச்சர் அத்தாவுட செனவிரத்ன கலந்துகொண்டார். இலங்கைக்கான குவைத் நாட்டு தூதுவர் யாகூப் அலாடீகி, சுயாதீன தொலைக்காட்சி சேவையின் பணிப்பாளர் ஹாசிம் உமர், திகாரிய அங்கவீனர் நிலையத்தின் பணிப்பாளர் ஜிப்ரி கனீபா உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
