Published On: Saturday, February 25, 2012
சமூக பொலிஸ் சேவை உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு
(இன்ஷாப் முஹம்மட்)
ஆசியா பௌன்டேஷன் அமைப்பின் அனுசரனையுடன் கெப்சோ அமைப்பின் ஏற்பாட்டில் அம்பாரை மாவட்ட சமூக பொலிஸ் சேவை உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி செயலமர்வு இன்று சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் கெப்சோ திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே.காமில் இம்டாட் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பீ.ஜீ.சரத் பிரேமலால், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் என்.எம். மென்டிஸ் பிரஜா, பொலிஸ் இணைப்பதிகாரி சரத் தீபலால், ஆசியா பௌன்டேஷன் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் ரிஷாத் செரீப், கெப்சேர் பணிப்பாளரும் சம்மாந்துறை பள்ளிவாசல் சம்மேளனத்தின் தலைவருமான ஐ.ஏ.ஜப்பார், சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி சம்சுதீன் உட்பட அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.