எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Wednesday, June 18, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Saturday, February 25, 2012

மனித உரிமைகள் கூட்டத்தொடரை எதிர்கொள்ள பொன்சேகாவே சிறந்தவர்

Print Friendly and PDF


(ஐ.எம்.பாயிஸ்) 
எதிர்வரும் 27ஆம் திகதி ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் அதனை எதிர்கொள்வதற்கும் செல்லவேண்டிய பொருத்தமான நபர், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா என நேற்று காலி நகர மண்டபத்தில் நடைபெற்ற தொழில்சார் புத்திஜீவிகளுடனான சந்திப்பில் உரையாற்றும்போது முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கையின் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக்கோரி, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட் பல மேற்குலக நாடுகள் தீர்மானம் நிறைவேற்றக் காத்திருக்கின்றன.

இவற்றை எதிர்கொள்ள இலங்கையிலிருந்து 52 பேர் அடங்கிய குழு ஜெனீவா சென்றுள்ளது. எனினும் மனித உரிமைகள் கூட்டத்தொடரை எதிர்கொள்ள, இறுதிக்கட்ட யுத்தத்திற்கு வெற்றிகரமாக தலைமை தாங்கிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவே அங்கு அனுப்பி வைக்கப்பட வேண்டிய சிறந்த நபராக தாம் கருவதுவதாக சரத் என். சில்வா தெரிவித்துள்ளார்.

நல்லூர் கோவிலுக்கு சென்றபோது பொன்சேகா தனது சட்டையினை கழட்டியது போன்று இங்கும் கழட்டி தனது உடலில் உள்ள யுத்தத்தின் தளும்புகளினை உலகிற்கு காட்டி, தான் கொடிய பயங்கரவாதிகளுடனேயே போரிட்டேன் எனவும், தன்னை கொலை செய்ய மூன்று முறை குண்டுத் தாக்குதல் மேற்கொண்டனர் எனவும் பொன்சேகா எடுத்துக் கூறினால் மனித உரிமைகள் பேரவையில் போர்க்குற்றம் வலுவிழக்கும் என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேசதுக்கு பதில் அளிக்க பொருத்தமானவர் சரத் பொன்சேகாதான் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்து இருந்தார்.

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452