Published On: Wednesday, February 29, 2012
பாகிஸ்தானுக்கு பின்லேடன் பற்றி தெரியும் - விக்கிலீக்ஸ்

பாகிஸ்தானில் அபோதாபாத் நகரில் பதுங்கியிருந்த பின்லேடன் கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்க படையி னரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் நடந்த ஓரிரு நாளில் ஸ்ட்ராட்பர் என்ற புலனாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரட் பர்டன் என்பவர், அதே நிறுவனத்தின் தெற்கு ஆசிய பிராந்திய இயக்குநருக்கு ஒரு இ,மெயில் அனுப்பி உள்ளார்.
அதில், பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உயர் அதிகாரிகள்தான், ஒசாமா தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். குறிப்பாக ஓய்வுபெற்ற மேஜர் ஒருவர், ஒசாமாவுடன் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார் என அந்த இ,மெயிலில் கூறியிருந்ததாக விக்கிலீக்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.