Published On: Friday, February 24, 2012
சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கல்

(நப்றிஸ்)
கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்முனைக்குடி கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பொலிஸ், பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ஆரியரத்ன, பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு உதவி பொலிஸ் சார்ஜன் ஏ.எல். நபீல் மற்றும் கல்முனைக்குடி 1-5 ஆம் கிராம சேவகர் பிரிவுகளின் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.யி.ஜே.பி. நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு சார்பாக உதவி பொலிஸ் சார்ஜன் ஏ.எல். நபீல் இங்கு உரையாற்றும்போது, முன்பு இந்த அடையாள அட்டைகள் வழங்கப்படடிருந்தும் ஒருசிலர் அதனை தவறாக பயன்படுத்தியிருந்தமை காரணமாகவே அவர்களை நீக்கிவிட்டு, அதனை புதிய வடிவில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனை யாரும் தவறாகப் பயன்படுத்தி விடக்கூடாது. அத்துடன் எமது பொலிஸாருடன் இணைந்து சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட அனைவரும் சேவையாற்ற முன்வர வேண்டும். மாறாக தவறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்படும் என்று கூறினார்.



