Published On: Friday, February 24, 2012
சாக்லேட் சாப்பிட்டதற்கு பரிகாரம் ஒரு உயிரா?

சாக்லேட் சாப்பிட்டதற்காக 9 வயது சிறுமியை தண்டிக்க அவரை 3 மணி நேரம் நிற்காமல் ஓடும்படி செய்து ள்ளனர். இதனால் நா வறண்டு மயங்கிய சிறுமி பரிதாபமாக உயிர் இழந்தார்.
அமெரிக்காவின் அலபாமா பகுதியைச் சேர்ந்த சிறுமி சவன்னா ஹார்டின் (வயது 9). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வந்தாள். அவளது மாற்று தாய் ஜெசிகா மே ஹார்டின் (வயது 27), பாட்டி ஜாய்ஸ் ஹார்டின் காரட் (வயது 47). கடந்த வெள்ளிக்கிழமை சவன்னா சாக்லேட் சாப்பிட்டுவிட்டு பாட்டியிடம் இல்லை என்று பொய் சொல்லியிருக்கிறாள். இதனால் ஆத்திரமடைந்த ஜெசிகாவும், ஜாய்ஸும் சவன்னாவை 3 மணிநேரம் நிற்காமல் ஓடச் செய்துள்ளனர்.
ஓடிக் கலைத்த சிறுமி இறுதியில் மயங்கி விழுந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கடந்த திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜெசிகா மற்றும் ஜாய்ஸை கைது செய்தனர். சவன்னாவை மிரட்டி ஓடச் செய்தார்களா, அல்லது அடித்து ஓட விட்டார்களா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.