Published On: Tuesday, February 28, 2012
அம்பாறை மாவட்டத்தில் அரசுக்கு ஆதரவாக ஆர்பாட்டங்கள்

நிந்தவூர் மற்றும் இறக்காம பிரதேச சபைகளின் ஏற்பாட்டில் நடைபெட்ட அமெரிக்காவுக்கும் அதன் நேச நாடுகளுக்குமான எதிரான ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக் கணக்கான மக்கள் கூட்டம் தாய் நாடுக்கு ஆதரவாகவும்அமெரிக்காவுக்கு எதிராகவும் சுலோக அட்டைகளை தாங்கியும் எதிர்ப்பு ஹோசங்களை தெரிவித்தும் தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டனர் .
திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ .பைசல் காசிம் பிரதானமாக கலந்து கொண்ட இவ் நடவடிக்கயில் சபை தவிசாளர்கள் ,உறுப்பினர்கள் ,உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர் .
தற்போதைய தகவல்களின் படி கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானாலும் . இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை மார்ச் மாதம் 23 ஆம் திகதியே வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரியவருகின்றது.இதில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, மெக்ஸிக்கோ, தென் ஆபிரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட முக்கியமான நாடுகள் இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளிக்கும் அதேவேளை, ரஷ்யா, சீனா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா, உகண்டா, மலே சியா, சிங்கப்பூர், சவூதி அரேபியா, குவைத், கட்டார் உள்ளிட்ட சில நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படத் தீர்மானித்துள்ளன என்று அறிய முடிகிறது.




