எங்களைப் பற்றி | விளம்பரம் செய்ய 'துருவம்' செய்திகளை உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசியில் இலவசமாக பெற்றுக்கொள்ள "Follow thuruvam" என டைப் செய்து 40404 க்கு அனுப்புங்கள்.
Thursday, May 08, 2025
Headlines
  • virakesari.tv
  • Facebook
  • YouTube
  • RSS feed
  • Follow us on Twitter
Published On: Friday, February 24, 2012

தந்தையின் சித்திரவதையினால் 5 வயது சிறுவன் மரணம்

Print Friendly and PDF


தந்தை ஒருவரின் சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளான். பண்டாரவளையைச் சேர்ந்த மகுல்லெல்ல பகுதியின் முஹம்மது காசிம் என்ற 5 வயது நிரம்பிய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். சிறுவனின் மரணத்தையடுத்து தலைமறைவான தந்தையை, பெரும் சிரமத்தின் மத்தியில் பண்டாரவளைப் பொலிஸார் கைதுசெய்து பண்டாரவளை மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டபோது, நீதிபதி அவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

மேற்படி சிறுவனின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றிற்கு வீட்டுப் பணிப் பெண்ணாக தொழிலுக்குச் சென்றுள்ளார். இதனால் தந்தையின் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்து மேற்படி சிறுவன் தந்தையின் பல்வேறு வகையிலான கொடுமைகளுக்கும் சித்திரவதைக்கும் உட்பட்டுள்ளதுடன், துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அச் சிறுவனுக்கு குளவிகள் கொட்டியதாகக் கூறி பண்டாரவளை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அங்கிருந்து தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்பட்டார்.

வருத்தம் கடுமையானதினால் சிறுவன் விசேட அம்புலன்ஸ் மூலம் பதுளை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். பலமணிநேர சிகிச்சையின் பின்னர் சிகிச்சை பயனளிக்காமல் அச்சிறுவன் உயரிழந்தான். இச்சிறுவனுக்கு இச்சிறுவனின் ஆண் உறுப்புக்கள் மற்றும் பின்பகுதி கடித்து குதறப்பட்டுள்ளதுடன், உடம்பின் பல பகுதிகளில் சூடுபட்ட காயங்களும் காணப்பட்டதாக டாக்டர்கள் கூறினர். மேலும் இச்சிறுவன் படுமோசமான சிறுவர் துஷ்பியோகத்திற்கும் உட்படுத்தப்பட்டிருக்கின்றாரென்று தெரிய வந்துள்ளது. 

Related News

அமெரிக்க தீர்மானத்திற்கு புலம்பெயர் தமிழர்களும் எதிர்ப்பு

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர் பான தீர்மான நகல் வரைபானது அமெரிக்க அரசாங்கத்தின
மேலும் »

பிரதான செய்திகள்
சர்வதேச செய்திகள்

கடாபி மகனின் 10 மில்லியன் பெறுமதியான வீட்டுக்கு ஆப்பு

லிபியாவின் சர்வாதிகாரியாக கடந்த 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்... மேலும் »

சிறப்புக் கட்டுரை
சினிமா செய்திகள்

டெல்லியில் இன்று காதலனை கரம் பிடித்தார் ரீமா சென்

நடிகை ரீமா சென், காதலன் சிவ் கரண் சிங் திருமணம் டெல்லியில் இன்று நடந்தது. ‘மின்னலே, தூள், செல்லமே, ‘ஆயிரத்தி... மேலும் »

வர்த்தக செய்திகள்

டேவிட் பீரிஸ் கம்பனியின் அலுவலகம் இடமாற்றம்

(கலாநெஞ்சன்) வரையறுக்கப்பட்ட டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனியின் நீர்கொழும்பு பிரதேச அலுவலகம் புதிய இடத்த... மேலும் »

மண்டு வாத்தியார்

என்னடா இது? இந்த மாதம் ஆர்ப்பாட்ட சீசனா?

எப்புடி சுகமா இருக்கிறியளோ? நமக்குத்தான் அது கொஞ்சம் பஞ்சமாக் கெடக்கு. அதுதான் கனநாளா என்னக் காணல. இப்ப என்ன... மேலும் »

இணையத்தளங்கள்

Sign Up to Thuruvam Newsletter

© 2012 Thuruvam All Rights Reserved.
|
Call us on ( +94 ) 71 35 45 452